Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

பெண்களின் சதைக்குத்தான் சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - ரஞ்சித்


சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர் என்று திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் கூறினார்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் பேசினார்.

அப்போது பேசிய அவர், ”சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர். பாலியல் இச்சை பற்றி பேசுகிற பெண்கள் வில்லன்களோடு இருப்பவர்களாகவும், அவர்கள் சிறுபான்மை சமூகத்தினர் பெயர் கொண்டவர்களாக காட்டுகின்றனர். உயர் சமூகத்து பெண்கள் பேசினால் அது புரட்சியாகவும், மற்ற பெண்கள் பேசினால் குற்றமாக சினிமா காட்டுகிறது.

திரைப்படங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள் கொல்லப்படுவார்கள். படைப்பாளிகளுக்கு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் பருவமடைந்த பெண் குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கற்பிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பீதி உருவாக்கப்படுகிறது. இதனால் பெண்கள் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை தனியே எதிர்கொள்ள முடியாமல் ஆண் துணையை நாடுகிறார்கள். இதுவே மோசமானது. நமது குடும்ப அமைப்பு மிக மோசமானதாக உள்ளது” என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic