கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக, 5 மற்றும் 6வது மின் உற்பத்தி உலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இந்தியா, ரஷ்யா இடையே நிறைவேற உள்ளது.ரஷ்யாவின் உதவியுடன் தமிழகத்தின் கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதில், 4 மின் உற்பத்தி உலைகள் நிறுவப்பட்டு, முழுவீச்சில் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், மேலும் 2 உலைகளை நிறுவ, முடிவு செய்யப்பட்டு, இதுதொடர்பான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின் இருவரும் சந்தித்து, கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கப் பணிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Write comments