காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருந்த கர்நாடகா தற்போது காவிரி நீரை திறந்து விட ஒப்புதல் தெரிவித்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிரான மத்திய அரசின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு ஒப்புதல் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அணைகளை மேற்பார்வைக் குழு பார்வையிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Write comments