சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 அடுக்குமாடி கட்டிடம் இடிக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென இடிந்துவிழுந்ததில், பலர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை சரிவர தெரியாத நிலையில், அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த மற்றொரு 11 அடுக்குமாடி கட்டிடமும் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த கட்டிடமும் இடிந்துவிழும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதன்பேரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படவே, அதனை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகர்க்கும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிகள் கொண்ட கட்டிடத்தை வெடிவைத்து, தகர்க்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் இன்று (நவ.,2) மாலை 5 மணிக்கு மேற்கொள்வதாக, அறிவித்தனர். இதற்காக, சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அந்த கட்டிடம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தைச் சுற்றி வசித்துவந்த பொதுமக்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, கட்டிடத்தை தகர்க்கும் பணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. எனினும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதோடு, போதிய வெளிச்சம் இல்லாததாலும் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சிறிது நேரத்திற்குள் மவுலிவாக்கம் கட்டிடம் வெடிவைத்து, தகர்க்கப்படும் என்றும், ஒருவேளை எதிர்பார்த்தபடி இப்பணி நடைபெறாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் இப்பணியை நடத்தி முடிக்க, சிஎம்டிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென இடிந்துவிழுந்ததில், பலர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை சரிவர தெரியாத நிலையில், அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த மற்றொரு 11 அடுக்குமாடி கட்டிடமும் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த கட்டிடமும் இடிந்துவிழும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதன்பேரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படவே, அதனை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகர்க்கும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிகள் கொண்ட கட்டிடத்தை வெடிவைத்து, தகர்க்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் இன்று (நவ.,2) மாலை 5 மணிக்கு மேற்கொள்வதாக, அறிவித்தனர். இதற்காக, சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அந்த கட்டிடம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தைச் சுற்றி வசித்துவந்த பொதுமக்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, கட்டிடத்தை தகர்க்கும் பணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. எனினும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதோடு, போதிய வெளிச்சம் இல்லாததாலும் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சிறிது நேரத்திற்குள் மவுலிவாக்கம் கட்டிடம் வெடிவைத்து, தகர்க்கப்படும் என்றும், ஒருவேளை எதிர்பார்த்தபடி இப்பணி நடைபெறாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் இப்பணியை நடத்தி முடிக்க, சிஎம்டிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments