சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் புஷ்பராஜ் நேற்றைய தினம தனது இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனம் கூட செல்லமுடியாத பல இடங்களுக்கு நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.
பி.கே காலனி பகுதியில் பிரச்சாரத்டில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் புஷ்பராஜ் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது "தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை அடைந்துள்லது. இந்த நிலையில் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக ஒரு கூட்டம் வருகிறது. அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் அர்ப்ப காசுக்காக ஐந்து வருடம் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியது வரும். ஆகவே மக்கள் நலன், அடிப்படை வசதி இவற்றை கருத்தில் கொண்டு கேஸ் சிலின்டர் சின்னத்திற்கு வாக்களித்து என்ன வெற்றி பெறச்செய்யுங்கள். உங்களிலிருந்தே மாற்றத்தை ஏற்படுத்துங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
புஷ்பராஜை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் டெஹ்லான் இன்று இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
புஷ்பராஜை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் டெஹ்லான் இன்று இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Write comments