இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் நின்றிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல் கான் 59 ரன்கள் எடுத்தார். காலித் லத்திஃப் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.
14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது பாகிஸ்தான். காலித் 59 ரன்களுடனும், பாபர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments