நடிகரும் அரசியல்வாதியுமான ரித்தீஷ் நடிகர் உதய நிதி ஸ்டாலினை செமத்தியாக கலாய்த்திருக்கிறார்.
சமீபத்தில அவர் அளித்த பேட்டியில் "ஸ்டாலின் தனது சொத்து மதிப்பை காட்டும்போது 4 கோடி என்று கணக்கு காட்டுகிறார். அவரோட மகன் உதயநிதி தயாரிக்கும் படங்களின் மதிப்பு ஒன்றுக்கு மட்டுமே 30 கோடி மேல் செலவாகிறது. படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு சம்பளம் மட்டுமே 3 கோடி வரை கொடுக்கின்றனர்.
படமே ஓடவில்லையென்றாலும் வருடத்திற்கு 3 படம் வரை எடுத்துவிடுகின்றனர். இப்படி ஓடாத நடிகருக்கு படம் எடுக்க பணம் எங்கிருந்து வருகிறது? ஊழல் செய்தால் மட்டுமே அதற்கு பணம் கிடைக்கும். எனவே தமிழக மக்கள் தயவு கூருந்து உதய நிதியின் படங்களை ஓட வைத்துவிடுங்கள் இல்லயேல் அவர்கள் ஊழல் செய்து கொண்டுதான் இருப்பார்கள்" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments