தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களில் அன்னிய குளிர்பானங்களை தவிர்த்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடைகளில் பெப்சி,கோக் போன்ற அன்னிய பானங்கள் விற்கப்படாது என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வணிகர் சங்கங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பெப்சி,கோக் போன்றவற்றை மார்ச் 31-ஆம் தேதி முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது டாஸ்மாக்கில் மது குடிக்கும் ஒரு கோடி பேருக்கு அதிர்ச்சியாக உள்ளது.டாஸ்மாக் மதுபானங்களில் கோக்,பெப்சி கலந்து குடித்து வருகிறோம்.இதனால் மன நிறைவு ஏற்படுகிறது.ஆனால் திடீரென நிறுத்துவதன் மூலம் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படும்.ஆகவே ஜுன் வரை விற்பனையை தொடர வேண்டுகிறோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் இந்த அறிக்கையை வைத்து நெட்டிசன்கள் காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments