தமிழக வரலாற்றில் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என மதுரை அலங்காநல்லூருக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஊருக்குள் வரவிடாமல் வழியில் தடைகளை போட்டு விரட்டினர்.
தவிர, ஒரு காளையையும் தர முடியாது என அவர்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால், முதல்வர் பன்னீர் செல்வம் அலங்காநல்லூருக்கு பதில், நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். ஆனால் அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அரசின் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தமிழகத்தின் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது வரலாற்றில் இதுவே முதல் முறை.

No comments:
Write comments