வெளிநாடுகளிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் நிருவனம். ருசிக்கும் விலைக்கும் பெயர் பெற்றவை இந்த ஹோட்டல். இதன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை சென்ற பிறகும் சரவண பவன் ஹோட்டல்களின் மவுசு குறைந்தபாடில்லை. இந்நிலையில் இன்று தீடீரென சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள அதன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை சீல் வைத்து இழுத்து மூடினர்.
அதே போல 9 கிளை ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரே நாளில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments