பட்ஜெட்டுக்கு முதல் நாளான இன்று "பொருளாதாரக் கண்ணோட்டம்" என்ற அறிக்கையை மத்திய அரசின் பொருளாதார ஆலோசனை பிரிவு வெளியிட்டது. இதில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தபப்டுத்திவிட்டது என தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் ஊழலுக்கு எதிராகவும் பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டதாக நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு பண பற்றாக்குறையை ஏற்படுத்தி தனி நபர்களையும் வர்த்தக நிறுவனங்களையும் வெகுவாக பாதித்தது. வரும் மார்ச் வரை இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட வள்ர்ச்சியான 7.6 சதவிகிதத்திலிருந்து குறைவானது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு முந்தைய நிலைமையை அடிப்படையாகக்கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை பதுக்கி இருப்போர் தான் ரூபாய் நோட்டு விவகாரத்தை விமர்சிப்பார்கள்.
வளர்ச்சி என்பது இதைவிட குறைவாக இருக்கும் என்று சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். நாளை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதில் பொருளாதாரம், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விட்ட பிறகு மார்ச் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பும் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள எதிர்மறைத் தாக்கம் என்பது தற்காலிகமானது என்ற இந்த அறிக்கையை தயாரித்த மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் ஊழல் மற்றும் ரொக்க பரிவர்த்தனை குறைந்தத்டால் இந்த திட்டம் நீண்ட கால தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் அனுகூலமானதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பு மூலம் எதிர்ம்றைத் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருப்பது திருப்தியளிக்கிறது என ஐ.டி.பி.ஐ பெடரல் வங்கி தலைமை முதலீட்டு அலுவலர் அனீஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் அரசு முதன் முறையாக இதை ஒப்புக்கொண்டுள்ளது, இதற்கு முன்பு வரை இதனை மறுத்தே வந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Write comments