கோவையில் கோயில் ஒன்றில் பா.ஜ., தலைவர் வானதி சீனிவாசனிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை போலீசார் கைது செய்தள்ளனர்.பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவை கோணியம்மன் கோயிலில் வானதி சீனிவாசன் சிறப்பு அர்ச்சனை செய்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வானதி சீனிவாசனிடம், தனது காதலை கூறி ரோஜாப் பூ அளித்துள்ளார். இதனால் வானதி சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த இளைஞரை பிடித்த பா.ஜ.,வினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் முத்துவேல் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Write comments