கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுபாஷ் வெலிங்கர், புதிய அமைப்பை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிளவு ஏற்பட வாயப்புள்ளதாக கருதப்படுகிறது.
கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் சுபாஷ் வெலிங்கர். அந்த மாநிலக் கல்வித்துறையில் மத்திய அரசு ஆங்கிலத்தை திணிப்பதாகக் கூறி சுபாஷ் வெலிங்கர் அண்மைக்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே, கோவாவுக்கு சில நாள்களுக்கு முன்பு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சுபாஷ் வெலிங்கர் நடத்தி வந்த மொழிப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் கருப்புக் கொடி காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து சுபாஷ் வெலிங்கர் கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் தலைமையின் இந்த நடவடிக்கைக்கு வெலிங்கர் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவா பிராந்திய ஆர்எஸ்எஸ் என்ற புதிய அமைப்பு ஒன்றை தாம் தொடங்கப்போவதாக வெலிங்கர் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், 2017-இல் நடைபெறும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தமது அமைப்பு போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், கோவா ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களில் ஏராளமானோர் வெலிங்கர் தொடங்கவுள்ள புதிய அமைப்பில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிளவு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே, கோவா மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தா பிகாஜி நாயக் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் என்பது ஒரே அமைப்பாகும். கோவா பிராந்திய ஆர்எஸ்எஸ் என்று யாரும் தனி அமைப்பைத் தொடங்க முடியாது. அவ்வாறு ஒரு அமைப்பு தொடங்கப்பட்டால், கோவா ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து 20 சதவீதம் பேர் மட்டுமே அதில் இணைய வாய்ப்பிருக்கிறது. எனவே, கோவா ஆர்எஸ்எஸ் பிளவுபடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் சுபாஷ் வெலிங்கர். அந்த மாநிலக் கல்வித்துறையில் மத்திய அரசு ஆங்கிலத்தை திணிப்பதாகக் கூறி சுபாஷ் வெலிங்கர் அண்மைக்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே, கோவாவுக்கு சில நாள்களுக்கு முன்பு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சுபாஷ் வெலிங்கர் நடத்தி வந்த மொழிப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் கருப்புக் கொடி காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து சுபாஷ் வெலிங்கர் கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் தலைமையின் இந்த நடவடிக்கைக்கு வெலிங்கர் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவா பிராந்திய ஆர்எஸ்எஸ் என்ற புதிய அமைப்பு ஒன்றை தாம் தொடங்கப்போவதாக வெலிங்கர் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், 2017-இல் நடைபெறும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தமது அமைப்பு போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், கோவா ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களில் ஏராளமானோர் வெலிங்கர் தொடங்கவுள்ள புதிய அமைப்பில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிளவு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே, கோவா மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தா பிகாஜி நாயக் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் என்பது ஒரே அமைப்பாகும். கோவா பிராந்திய ஆர்எஸ்எஸ் என்று யாரும் தனி அமைப்பைத் தொடங்க முடியாது. அவ்வாறு ஒரு அமைப்பு தொடங்கப்பட்டால், கோவா ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து 20 சதவீதம் பேர் மட்டுமே அதில் இணைய வாய்ப்பிருக்கிறது. எனவே, கோவா ஆர்எஸ்எஸ் பிளவுபடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

No comments:
Write comments