கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் இரு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்க காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 29 பேர் காயமடைந்தனர்.இந்த பயங்கரவாத செயல் தொடர்பாக ஆப்கன் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த அமெரிக்க புலனாய்வுத் துறையினர்,அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நியூஜெர்சியின் புறநகர் பகுதியில் அந்த இளைஞரை இருப்பதை அறிந்து கொண்ட அமெரிக்க காவல்துறையினர்,அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28 வயதான அந்த இளைஞரின் பெயர் அஹ்மத் கான் ரஹாமி எனவும்,அவருடைய மனைவி பாகிஸ்தானில் இருப்பதாகவும்,அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments