Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

ஜனநாயக ரீதியில் போராடக்கூட தமிழகத்தில் உரிமை இல்லை..!

no rights to conduct protest in tamilnadu

தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக அனைத்து விவசாய சங்க ஒருங்கினைப்பாளர் பி.ஆர் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு வாசலில் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர் எச்சரித்துளார்.

அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை நேற்று இரவு கைது செய்த போலீசார் நள்ளிரவில் விடுதலை செய்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic