கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ‘உன் நண்பன் இஸ்லாமியராக மதம் மாறினால் என்ன செய்வாய்?’ என பாடப்புத்தகத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கேரளா மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் பீஸ் சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தில்தான் மேற்கண்ட கேள்வி இடம்பெற்றுள்ளது.இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை மாற்று மத மாணவர்கள் மீது புகுத்துவது போல இந்த கேள்வி இருப்பதாகக் கூறி,அந்த பள்ளி மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அளித்துள்ள புகார் காரணமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.குறிப்பாக இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில்,”ஒருவேளை உனது நண்பர்களான ஆடம்/சூசன்னா ஆகியோர் இஸ்லாமிய மதத்திற்கு மாற முடிவெடுத்தால்,அவர்களுக்கு நீ என்ன அறிவுறை வழங்குவாய்? “என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அந்த கேள்விக்கான விடைத்தேர்வுகளாக
1)அவர்களின் பெயரை உடனடியாக அகமது/சாரா என மாற்றச் சொல்லுவேன்.
2)அவர்கள் செயின் அணிந்திருந்தால் அதை நீக்கச் சொல்லுவேன்.
3)ஷகதாவை கற்கச் சொல்லுவேன்.
4)அவர்களுடைய பெற்றோர்கள் இஸ்லாமியர் இல்லை எனில் வீட்டை விட்டு ஓடச் சொல்லுவேன்.
5)ஹலால் செய்யப்பட்ட சிக்கனை மட்டுமே சாப்பிட சொல்லுவேன்
என பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இந்த பள்ளிக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்த சர்ச்சை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Write comments