இதன் மூலம், கடந்த ஆண்டு குவங்ஜூ உலக பல்கலைக்கழகம் விளையாட்டுப் போட்டிகளின் போது தென் கொரியா வீராங்கனை கிபோபே நிகழ்த்திய உலக சாதனையை சமன் செய்துள்ளார். போட்டியின் இடைவெளியின்போது, உலக சாதனை முறியடிக்க தீபிகா குமாரிக்கு 343 புள்ளிகள் தேவைப்பட்டிருந்தது.
ஆனால், போட்டியின் முடிவில் தீபிகா குமாரி 342 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து பெருமை சோ்த்தார். கடந்த 2014-ம் ஆண்டு போலந்து நாட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தமைமையிலான இந்தியா பெண்கள் வில்வித்தை அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மற்ற விளையாட்டுக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இது போன்ற திறமையான வீராங்கனைகளை கண்டுகொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
No comments:
Write comments