தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடலூர், சிதம்பரம் உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாக்களர்கள் வாக்குச்சாவடிகு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போல பல மாவட்டங்களிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திட வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்து வருவதாகவும், வாக்களிப்பதற்கான நேரத்தை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments