முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை நெல்லையில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் மாலை 3.30 மணிக்கு வந்து இறங்குகிறார்.
பிறகு கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பாளை பெல் பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். 4 மணிக்கு தொடங்கும் பொதுக்கூட்டத்தில் 20 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பிரசார மேடை மைதானத்தை சுற்றிலும் ஜெயலலிதாவின் பிரமாண்ட உருவப்படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மைதானத்துக்குள் நுழையும் பகுதியில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் அமருவதற்கு வசதியாக தனியாக இடவசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தாகம் தீர்க்க 7 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கவும், 7 டேங்கர் லாரிகள் மூலம் குடி தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் வசதிக்காக 25 நகரும் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நெல்லை வருகையை முன்னிட்டு நெல்லை, பாளையங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பெல் பள்ளி மைதானம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேடை அமைக்கப்பட்டுள்ள பெல் மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments