சென்னையிலுள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இயக்குநர் போஸ், தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
மக்கள் பிரதிநிதிச்சட்டம் 1951, சட்டப்பிரிவு ‘135பி’-ன் படி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினரும், அவற்றில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 16ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வாக்களிப்பதற்காகவே விடுமுறை - வாக்களிக்கவும்.
இவ்வாறு இயக்குநர் போஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments