முன்னர் இருந்த ஆண்ட்ராய்டு போனில் இண்டர்நெட் வசதி இருந்தால் தான் காவல்துறையின் செல்போன் சாப்ட்வேரை பயன்படுத்தி காவல் நிலைய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்க முடியும். ஆனால், புதிய சாப்ட்வேர் மூலம் இண்டர்நெட் இல்லாமலேயே உதவி கோர முடியும்.
ஆண்ட்ராய்டு செல்போன் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினாலான புதிய அப்ளிகேசனை (Madurai City Police), மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பிருந்த சாப்ட்வேரில் இண்டர்நெட் வசதி தேவைப்படுவதால் இண்டர்நெட் வசதி இல்லாத இடங்களில் அந்த சாப்ட்வேரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிக்க இண்டர்நெட் வசதி தேவைப்படாது. அதில் இருக்கும் எஸ்ஓஎஸ் என்ற குறியீட்டை அழுத்தினால் 5 நிமிடத்தில், அழைத்தவர்கள் இருப்பிடத்தை போலிசார் கண்டுபிடித்து அங்கு வந்து காப்பாற்ற உதவி செய்வர். இந்த சாப்ட்வேர் தனிமையில் இருக்கும் பெண்கள், கல்லூரி, வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஆபத்து காலத்தில் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செல்போன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய கூகுள் ப்ளே ஸ்டாரில் சென்று ‘Madurai City Police’ என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Write comments