தமிழகத்தில் பெருவாரியான இசுலாமியர்கள் வாழும் ஊரில் காயல்பட்டினம் மிக முக்கியமானது. ரமலான் தலைபிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டம் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (ஜூன் 6) இரவு நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ரமலான் தலைபிறை மற்றும் நோன்புப் பெருநாள் உள்ளிட்ட பிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக நகர உலமாக்களின் கூட்டுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரமலான் தலைபிறை குறித்த தகவல்களைப் பெற்று அறிவிப்பை வெளியிடுவதற்காக இக்கூட்டம் மஃரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில், நகர உலமாக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments