பிரேசிலில் நடந்த 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள்
இன்றுடன்(ஆக.,22) நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா
முதலிடத்தையும், இந்தியா 67வது இடத்தையும் பிடித்தது.
பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆக.,3 ம் தேதி துவங்கிய 31வது ஒலிம்பிக்
போட்டிகள் இன்றுடன் (ஆக.,21) நிறைவடைந்தது. ரியோ ஒலிம்பிக்கில் 207
நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா
சார்பில் 15 விளையாட்டு போட்டிகளில், 118 வீரர், வீராங்கனைகள் கலந்து
கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகள் இன்றுடன்(ஆக.,22) நிறைவடைந்தது.
மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது.
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில்
நடைபெறுகிறது.

No comments:
Write comments