Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 24, 2016

நான் சொன்னது ஒன்னு! இவங்க புரிஞ்சிகிட்டது வேறொன்னு! - ரம்யா



பாகிஸ்தான் ஒன்றும் நரகம் இல்லை, அங்குள்ளவர்களும் நம்மை போல் உள்ளவர்கள் தான். வாய்ப்பு கிடைத்தால் பாகிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயாராக உள்ளேன் என நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,யுமான ரம்யா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் ரம்யாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பெங்களூரு மிரர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி : உங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ரம்யா : என்னத்த சொல்றது? நான் என்ன சொல்றேன்னு சரியா புரிஞ்சுக்கல.

கேள்வி : சிலர் உங்கள் கருத்து குறித்து தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனரே, அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ரம்யா: தேச துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான் ஒன்றும் தேசத்திற்கு எதிராகவோ அல்லது தனி நபருக்கு எதிராகவோ கருத்தை தெரிவிக்கவில்லை. எனது கருத்தை திரிக்க முயல்கின்றனர்.

கேள்வி : இந்த பிரச்னை குறித்து தங்கள் மூளையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?
 
ரம்யா: நானும் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்பு, அந்நாட்டின் மீது கொண்டிருந்த எனது எண்ணம், அங்கு இறங்கிய பின் தவறு என புரிந்து கொண்டேன். அங்குள்ள நகரங்களும், மக்களும் இந்தியாவை போல் தான் உள்ளன. அவசரமாக இந்தியாவிலிருந்து கிளம்பியதால், மாற்று உடை கூட எடுக்காமல் சென்றுவிட்டேன். அதனால் உடைகளையும் சில பொருட்களையும் வாங்க நானே அந்நாட்டு பாதுகாவலர் ஒருவர் உதவியுடன் கடைதெருவிற்கு சென்றேன்.

கேள்வி : பாகிஸ்தானில் உங்களுக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது?
 
ரம்யா : கடைத்தெருவில் உள்ள விற்பனையாளர்கள், நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன் என எளிதாக புரிந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் எங்கள் நாட்டுக்கு வர விசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என வினவினர். விற்பனையாளர்கள் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டனர். எனக்கு பழரசம், இனிப்பு கொடுத்தனர். நான் வாங்கிய பொருட்களுக்கு சரியான பணத்தை மட்டுமே கேட்டனர்.

கேள்வி : உங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டால் மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்வீர்களா?
 
ரம்யா : ஏன் செல்லக்கூடாது? பாகிஸ்தானும், பாகிஸ்தானியர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மையில்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளும் அமைதியை விரும்புகின்றன. அதனால் பாகிஸ்தான் செல்ல நான் ஏன் தயங்க வேண்டும்?

கேள்வி : முன்னதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் உங்கள் மீது சுமத்திய குற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
ரம்யா : இது ஒரு அர்பமான அரசியல் ஆதாயத்திற்கான விஷயமாக எண்ணுகிறேன்.
இவ்வாறு ரம்யா தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic