தமிழகத்திற்கு காவேரியில் தண்ணீர் திறந்து விடும் பேச்சிற்கே இடமில்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சித்தராமையாவும் சட்ட அமைச்சர் ஜெயசந்திராவும் கலந்து கொண்ட கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் விவசாயத்திற்காக தமிழ்நாட்டுக்கு தரும் அளவுக்கு காவேரியில் தண்ணீர் இல்லை என்றனர்.
காவேரி பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பாசனத்திற்காக காவேரி நீரை தாங்கள் பயன்படுத்தவில்லை என்று ஜெயசந்திர கூறினார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது எனக்கூறி மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கபட்டினம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

No comments:
Write comments