ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 கிலோ ஜூடோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இஸ்ரேனில் ஓர் சாசனுடன் எகிப்து வீரர் எல்ஷெகாபி மோதினார். இதில் இஸ்ரேல் வீரரே வெற்றி பெற்றார். இருப்பினும் போட்டி முடிந்ததும் ஜூடோ விளையாட்டு விதியின் படி ஒருவருக்கொருவர் முன்னிலையில் தலை குணிந்து கை குழுக்குவது வழக்கம். ஆனால் இப்போட்டியின் முடிவின் போது எகிப்து வீரர் அவ்வாறு கைகுழுக்க மறுத்துவிட்டார். எகிப்து வீரரின் இச்செயலை அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு கண்டித்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேல் வீரருடன் எல்ஷெகாபி மோதுவதற்கு அந்நாட்டில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேல் நாட்டு வீரருடன் எல் ஷெகாபி போட்டியிடக்கூடாது எனவும், இப்போட்டியில் வெற்றி பெறுவதின் மூலம் சாதிப்பதற்கு எதுவும் இல்லை. அதே சமயம் தோற்றுவிட்டால் நாட்டுகே மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிடும் என அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments