Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

வெளியிலேயே இருப்பவருக்கு வெளிவரமுடியாத பிடிவாரண்டாம்! என்ன கொடுமை சரவணன்...?


இந்திய வங்கிகளில் 9ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஆட்டையபோட்டுவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்ற மல்லையாவுக்கு எதிராக ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

எப்படியாகினும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வந்து விடவேண்டும் என்கிற ரீதியில் தலைகீழாக நின்று கொண்டு தண்னீர் குடிக்க முயன்று வருகிறது இந்திய அரசு. இதற்காக சர்வதேச இன்டர்போல் போலீஸை நாடியுள்ளது. இருந்த போதிலும் அது தொடர்பான எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.  மேலும் விஜய் மல்லையா மீது  சி.பி.ஐ அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை மல்லையா மீது அமலாக்கப்ப்ரீவு தாக்கல் செய்த பண மோசடி வழக்கில் மல்லையாவிற்கு இதுவரை 3 முறை பிடிவாரண பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீது செக் மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று  இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே இல்லாமல் வெளிநாட்டில் அதுவும் அந்நாட்டு பாஸ்போர்டோடு இருக்கும் மல்லையாவிற்கு வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இப்பேற்பட்ட சட்ட விதிமுறைகளை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic