Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

நடுத்தெருவில் சசிகலா புஷ்பா!

அட ஆண்டவா! ஒரு எம்.பிக்கு இந்த நிலையா ஏற்படனும்? கொஞ்சம் கைய கால வச்சிகிட்டு சும்மா இருந்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா? இப்படி தான் ஏகப்பட்ட விமர்சனங்கள் சசிகலா புஷ்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

திமுகவின் எம்.பி திருச்சி சிவாவுடன் அப்படி என்ன ஒரு வெறியோ தெரியவில்லை, பொது இடம் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் அறைந்துவிட்டார் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா. ஆனால் இதற்கு எதிர்வினையாக திருச்சி சிவாவும் எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் அமைதியாக சென்று விட்டார். இரண்டு பேருக்கும் மத்தியில் என்ன கருமமோ தெரியவில்லை. இருவரும் தனிமையாக கொஞ்சி குலாவும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி இருக்கிறது. அது உண்மையா? பொய்யா? என்பதை பிறகு ஆராய்ந்து கொள்ளலாம்.

இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு போயஸ் கார்டனிலிருந்து போன் வர, தலை தெரிக்க ஓடிச்சென்று தரிசித்த புஷ்பாவிற்கு விழுந்திருக்கிறது ஒரு 'பளார்'. அத்தோடு கட்சியிலிருந்தும் டிஸ்மிஸ் ஆனார். இதனையடுத்து மாநிலங்களவைக்கு வந்த சசிகலா புஷ்பா 'குய்யொ முய்யோ' கத்த "ஏண்டி உனக்கு என்ன திமுரு இருக்கும், நாங்க எத்தனை தடவை அடி வாங்கியிருப்போம், நாங்க எவ்வளவு அமைதியாக இருந்திருக்கிறோம். நீ என்ன ரொம்பதான் குதிக்கிற?" என்கிற ரீத்யில் அதிமுகவின் மற்ற எம்.பிக்கள் கொதித்தெழுந்தனர்.

இப்ப தமிழகம் முழுக்க எதிரிகளை சம்பாதித்த சசிகலா புஷ்பா தன்னை தற்காத்துக்கொள்ள ஏதாவது ஒரு பெரிய கட்சியில் இணைந்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் இருக்கிறார். முதலாவதாக திமுகவிற்கு தூது விட்டிருக்கிறார். ஆனால் அந்தம்மாவை சேர்க்கவே கூடாது. ஏற்கனவே நம்ம கட்சி தேர்தல் தோல்வி, உட்கட்சி பூசல் என நாரிகிட்டு கிடக்கு, அதுமட்டுமல்லாம அந்தம்மா நம்ம கட்சி எம்.பியைதான் அடிச்சிருக்கு. எனவே அத நம்ம கட்சிலே சேர்க்கவே கூடாதுன்னு திமுகவில் சிலர் கிளம்பிவிட்டார்களாம். இது தவிற சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்தவர். தூத்துக்குடி பகுதியில் ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அங்கமான அனிதா ராதாகிருஷ்ணனும் புஷ்பாவை சேர்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். இதனால் திமுக கட்சி தலைமை முடிவு எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

சரி திமுகவிலதான் இந்த நிலமை என்றால் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என புஷ்பாவின் நெருங்கிய வட்டாரம் ஆலோசனை தெரிவித்திருக்கிறது. அதையும் பரிசீலித்த சசிகலா புஷ்பா அங்கே ஏற்கனவே பிரம்மாண்ட ஷோ காட்டக்கூடிய குஷ்பு, நக்மா இருப்பதால் தாம் அங்கு சென்றால் தமக்கு மதிப்பு இருக்காது என்பதை நன்கு உணர்ந்து கொண்டுள்ளார் புஷ்பா, நடப்பு இப்படி இருக்க மற்றொரு பக்கம் நம்ம கட்சி எப்படியாவது தமிழகத்தில் உருப்பட்டு விடவேண்டுமென்பதற்காக தங்கள் வாசலை சசிகலா புஷ்பாவிற்காக திறந்தே வைத்திருக்கிறது பா.ஜ.க.

ஆனால் சசிகலா புஷ்பாவோ எதிர்பார்த்த அளவிற்கு அழைப்பு வராத காரணத்தினால் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார். சீக்கிரமே திமுகவிலிருந்து பச்சை கொடி காட்டப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic