செம்மரம் வெட்டவோ, கடத்தவோ ஆந்திராவுக்கு யார் வந்தாலும் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தினமும் திருமலையில் தரிசனம் செய்வதற்காக 2 லட்சம் பேர் வருவதாக கூறியுள்ளார். அனைவரையும் கைது செய்து செம்மரக்கடத்தல் பெர்வழிகள் என வழக்கு பதிவு செய்யவில்லை என்று கோபாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழர்கள் அப்பாவிகள் என்றால் நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். கடத்தல் காரர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இருந்தால் இது அவர்களின் விருப்பம் என்று கோபாலகிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். கடத்தலில் பிடிப்பட்ட செம்மரங்கள் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:
Write comments