ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கிடயே நடைபெற்ற துப்பாகிச்சண்டையில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள குத்தி மாவட்டத்திற்குட்பட்ட காசிரா கிராமத்தில் இரு வெவ்வேறு மாவோயிஸ்டு குழுக்களுக்களிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுலது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் முகேஷ், ராகுல் மற்றும் அணில் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் கொல்லப்பட்ட நான்காவது நபரின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கர குற்றப்பின்னனி கொண்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை பீப்புள்ல்ஸ் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எல்.எஃப்.ஐ) என்ற மாவோயிஸ்ட் அமைப்பு நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிக அளவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள குத்தி மாவட்டத்திற்குட்பட்ட காசிரா கிராமத்தில் இரு வெவ்வேறு மாவோயிஸ்டு குழுக்களுக்களிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுலது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் முகேஷ், ராகுல் மற்றும் அணில் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் கொல்லப்பட்ட நான்காவது நபரின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கர குற்றப்பின்னனி கொண்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை பீப்புள்ல்ஸ் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எல்.எஃப்.ஐ) என்ற மாவோயிஸ்ட் அமைப்பு நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிக அளவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments