Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 1, 2016

பிரிவினைவாதிகளுக்கு சலுகைகள் கிடையாது - மத்திய அரசு அதிரடி!


ஜம்மு கஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் அனுபவிக்கும் அரசு சலுகைகளை நிறுத்த நரேந்திர‌ மோடி அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமர் உஜாலாவில் வெளியிட்டுள்ள‌ செய்தியில் கூறியிருப்பதாவது, வெளிநாட்டு பயணத்தின் போது பிரிவினைவாத தலைவர்கள் சையத் அலி ஷாகிலானி, மிர்வாய்ஸ் பரூக் மற்றும் யாசின் மாலிக் அனுபவிக்கும் விமான டிக்கெட்கள், ஓட்டல் மற்றும் டாக்சி சேவைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோன்று மாநில அரசும் பிரிவினைவாதிகளுக்கு வழக்கும் சலுகைகளை நிறுத்த கஷ்மீர் மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 
இதில் குறிப்பிடும் படியாக பிரிவினைவாதிகளுக்கு ஒருவருடத்திற்கு ரூ. 100 கோடி வரையில் செலுவு செய்யப்படுகிறது. இந்த செலவை ஏற்றுக் கொள்வதில் மத்திய அரசின் பங்கு 90 சதவிதம், மாநில அரசின் பங்கு 10 சதவிதம் ஆகும்.

பிரிவினைவாத தலைவர்களுக்கு வழக்கும் பாதுகாப்பை நீக்குவது தொடர்பாக மாநில அரசால் முடிவு எடுக்கப்படும். இப்போது பிரிவினைவாத தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் 950 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஜம்மு கஷ்மீரில் கடந்த ஜூலையில் புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அமைதியின்மை 50- நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தில் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதன்காரணமாக‌ ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 72 பேர் பலியாகினர். இவர்களில் 69 பேர் பொதுமக்கள், 3 பேர் பாதுகாப்பு படையினர். 11,000 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து ஜம்மு கஷ்மீர் அரசின் ஹூரியத் தலைவர் கிலானியின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியது. கிலானியின் மூத்த மகன் நயீம் கிலானிக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியது, வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் பணம் வந்துஉள்ளது, பணம் கஷ்மீர் பகுதியில் தேசத்திற்கு எதிரான செயலில் ஈடுபட பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு பிரிவு, வாக்குமூலம் பெற நயீம் கிலானிக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic