முக்காலா முக்காபிலா லைலா...! என பத்து வருஷம் சினிமாவில் எப்படியெல்லாம் காட்டி நடிக்க முடியுமோ அப்படியெல்லாம் நடித்து விட்டு மார்க்கெட்டில் மவுசு போனவுடன் சில நடிகைகளில் அரசியலில் இறங்குகின்றனர். அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும்போது அவர்களை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுவதையும் நாம் காண்கிறோம்.
போராட்டம், மக்கள் பிரச்சனை, என எதிலும் ஈடுபடாத நடிகைகள் அரசியலில் இறங்கி என்னம்மோ பெரிசா கிழிக்கிற மாதிரி பேசுபவர்களை கண்டாலே கோபம் தலைக்கு ஏறுகிறது. இப்படிப்பட்டவர்களால் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க இயலும்? இப்படித்தான் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் நக்மாவின் நிலை. இந்த நக்மாதான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளராம். நல்லா விளங்கிடும்.
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கிறதாம். இதற்காக சென்னை வந்துள்ள நக்மா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாராம். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வழக்கம்போல மத்திய அரசை குற்றஞ்சாட்டிவிட்டு ராகுல் காந்தி அப்படி செய்கிறார், சோனியா காந்தி இப்படி செய்கிறார் என ஏகப்பட்ட பிள்டப்புகளை அள்ளி தெளித்திருக்கிறார். காவேரி பிரச்சனையை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, காவேரி பிரச்சனை பற்றி தமக்கு அவ்வளவாக தெரியாது என்றும், எனினும் கர்நாடக மக்கள் அநியாயம் செய்யமாட்டார்கள் என நன்றாக வக்காளத்து வாங்கி பேசினார்.

No comments:
Write comments