Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

நரோடா பாட்டியா வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்..!


நரோடா பாட்டியா கொலை வழக்கின் விசாரணைகளை இன்னும் 6 மாதத்திற்குள் முழுமையாக முடித்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் குஜராத் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முதலமச்சராக இருந்த போது மிகப்பெரும் மதக்கலவர்ம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்குமேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2002 பிப்ரவரி மாதம் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் தீ விபத்தில் அதில் பயணம் செய்த 60ற்கும் மேற்பட்ட கரசேவர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அடுத்தே பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது.

அகமதாபாத் நரோடா பாட்டியா பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை காலதாமதமாகிக்கொண்டிருப்பதாகவும் இவ்வழக்கின் சாட்சியங்களை அழித்துக்கொண்டிருப்பதாக காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா மற்றும் விசாரணை அதிகாரி பி.எல் லால் ஆகியோரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic