Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

ராம்குமாரின் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்


சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுவாதி என்ற பெண் பொறியாளர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே கலங்கடிதது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம் குமார், இன்று புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுவாதி வழக்கில் போலீஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது, இதனால் துவக்கத்திலிருந்தே சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டு வந்தேன். தற்போது ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் வழுத்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic