சுவாதி என்ற பெண் பொறியாளர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே கலங்கடிதது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம் குமார், இன்று புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சுவாதி வழக்கில் போலீஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது, இதனால் துவக்கத்திலிருந்தே சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டு வந்தேன். தற்போது ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் வழுத்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments