இலங்கை உள்நாட்டுப்போரின் இறுதிகட்டட்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நழுவினார்.
இலங்கை பயணத்தின் முடிவில் நேற்று மாலை ஐ. நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அந்நாட்டு தலை நகர் கொழும்பில் செய்தியாளர்கள் சந்தித்து ஒன்றை நடத்தினார். தனது இலங்கை பயணம் தொடர்பாக சுமார் 8 நிமிடங்கள் பான் கீ மூன் விளக்கி கூறினார். இதையடுத்து அவரிடம் கேள்விகளை எழுப்புவதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
12 நிமிடங்கள் மாத்திரமே செய்தியாளர்களுக்கு கேள்விகள் எழுப்ப வாய்ப்பு கொடுக்கப்பட்டது.இதனை அடுத்து போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பினர். எனினும் அந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் தவிர்த்து கொண்டே அடுத்த கேள்வியை கேட்குமாறு சொல்லிக்கொண்டே வந்தார். இதனால் போர் குற்றங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பிய பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இலங்கை பயணத்தின் முடிவில் நேற்று மாலை ஐ. நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அந்நாட்டு தலை நகர் கொழும்பில் செய்தியாளர்கள் சந்தித்து ஒன்றை நடத்தினார். தனது இலங்கை பயணம் தொடர்பாக சுமார் 8 நிமிடங்கள் பான் கீ மூன் விளக்கி கூறினார். இதையடுத்து அவரிடம் கேள்விகளை எழுப்புவதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
12 நிமிடங்கள் மாத்திரமே செய்தியாளர்களுக்கு கேள்விகள் எழுப்ப வாய்ப்பு கொடுக்கப்பட்டது.இதனை அடுத்து போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பினர். எனினும் அந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் தவிர்த்து கொண்டே அடுத்த கேள்வியை கேட்குமாறு சொல்லிக்கொண்டே வந்தார். இதனால் போர் குற்றங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பிய பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:
Write comments