சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அண்ணாநகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பல்லாவரம்,கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
மேலடுக்கு சுழற்சி லட்சத் தீவு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வானம் மேகமூட்டத்துடன், மாலையில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்தது.
சில இடங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. கோடம்பாக்கம், விருகம்பாக்கம், எழும்பூர், வடபழனி, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எதிர்பாராமல் பெய்த கனமழையினால் முன்னெச்சரிக்கை இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தவாறு சென்றனர். சிலஇடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனத்தில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலடுக்கு சுழற்சி லட்சத் தீவு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வானம் மேகமூட்டத்துடன், மாலையில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்தது.
சில இடங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. கோடம்பாக்கம், விருகம்பாக்கம், எழும்பூர், வடபழனி, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எதிர்பாராமல் பெய்த கனமழையினால் முன்னெச்சரிக்கை இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தவாறு சென்றனர். சிலஇடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனத்தில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

No comments:
Write comments