நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
திராவிட கட்சி என வைத்துக் கொண்டு, கேட்டால் நாங்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்கள் என கூறிக்கொள்கிறார்கள். தமிழக மக்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. தென்னிந்தியன், இந்தியன், திராவிடன் என பெயர் வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள் ஒருபோதும் தமிழனாக வாழ்ந்தது இல்லை.
கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான் என்று காங்கிரஸ் சொல்கிறது. கச்சத்தீவு எப்போதும் இந்தியருக்கு சொந்தமாக இருந்தது இல்லை என்று சொல்கிறது பாரதீய ஜனதா கட்சி. ஆனால் கச்சதீவை திருப்பி எடுத்தே ஆக வேண்டும் என போராடுகிறது தமிழ் தேசியம்.
இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது இந்திய தேசியம், தடையை உடை என்கிறது தமிழ் தேசியம், இதன் மூலம் மக்கள் தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் முதல்வர் பதவியில் என்றாவது ஒரு நாள் அமருவேன், இதற்கு நான் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை என பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
திராவிட கட்சி என வைத்துக் கொண்டு, கேட்டால் நாங்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்கள் என கூறிக்கொள்கிறார்கள். தமிழக மக்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. தென்னிந்தியன், இந்தியன், திராவிடன் என பெயர் வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள் ஒருபோதும் தமிழனாக வாழ்ந்தது இல்லை.
கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான் என்று காங்கிரஸ் சொல்கிறது. கச்சத்தீவு எப்போதும் இந்தியருக்கு சொந்தமாக இருந்தது இல்லை என்று சொல்கிறது பாரதீய ஜனதா கட்சி. ஆனால் கச்சதீவை திருப்பி எடுத்தே ஆக வேண்டும் என போராடுகிறது தமிழ் தேசியம்.
இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது இந்திய தேசியம், தடையை உடை என்கிறது தமிழ் தேசியம், இதன் மூலம் மக்கள் தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் முதல்வர் பதவியில் என்றாவது ஒரு நாள் அமருவேன், இதற்கு நான் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை என பேசியுள்ளார்.

No comments:
Write comments