இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யூசுப் கூறியதாவது, கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் அரசியல் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் அனுராக் தாகூர் அரசியல் அறிக்கை விடுத்து வருகிறார். அவர் பாரதீய ஜனதா கட்சி தலைவராக பேசுகிறாரா? அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக எங்களுடன் முறைப்படியான நேரடி தொடர்களில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருவதாக யூசுஃப் குற்றஞ்சாட்டினார்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யூசுப் கூறியதாவது, கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் அரசியல் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் அனுராக் தாகூர் அரசியல் அறிக்கை விடுத்து வருகிறார். அவர் பாரதீய ஜனதா கட்சி தலைவராக பேசுகிறாரா? அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக எங்களுடன் முறைப்படியான நேரடி தொடர்களில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருவதாக யூசுஃப் குற்றஞ்சாட்டினார்.

No comments:
Write comments