வங்கதேசத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று ஐஎஸ் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சர்வதேச அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச அரசு, நாடு முழுவதும் தீவிரவாதத்தை தடுக்கும் வகையிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, குறிப்பிட்ட ஹோட்டல் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் காஸிபூர், டாங்கெய்ல் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர்கள் இன்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காஸிபூர், அஃபர்கோலா மற்றும் டாங்கெய்ல் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள், நியோ ஜேஎம்பி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டறியப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும் என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று ஐஎஸ் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சர்வதேச அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச அரசு, நாடு முழுவதும் தீவிரவாதத்தை தடுக்கும் வகையிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, குறிப்பிட்ட ஹோட்டல் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் காஸிபூர், டாங்கெய்ல் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர்கள் இன்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காஸிபூர், அஃபர்கோலா மற்றும் டாங்கெய்ல் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள், நியோ ஜேஎம்பி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டறியப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும் என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments