ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலிலும் போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டானியோ குட்ரெஸ் வெற்றி பெற்றார். எனவே அவர் விரைவில் ஐ.நா.வின் புதிய பொதுச்செயாலாளர் ஆகிறார். ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூனின் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஐ.நா. பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா. வரலாற்றில் முதன்முறையாக விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. போர்ச்சுகல் முன்னாள் பிரதமரும், ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் இருந்த ஆன்டோனியோ குட்ரெஸ், ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கடந்த நான்கு சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர் இறுதிச் சுற்றிலும் முன்னிலை வகித்து ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வானார். அவரை ஐ.நா. பாதுகாப்பு அவை புதிய பொதுச் செயலாளராக அறிவித்தது.

No comments:
Write comments