பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ 100 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக மறுத்தாலும், பதிலுக்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. குறிப்பாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு ஒட்டிய பகுதியில் 100 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, ஆர்எஸ்புரா உள்ளிட்ட இந்திய எல்லை ஒட்டிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளது. இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்ததால் இருதரப்புக்கும் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் எல்லை வரை ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி பாகிஸ்தான் இராணுவம் வேவு பார்த்து உள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை கூறியுள்ளது. காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்திலும் பாகிஸ்தான் அத்துமீறும் நிலையில் வடக்கு பஞ்சாப்பில் பாகிஸ்தான் படகு ஒன்றை எல்லை பாதுகாப்பு படை பறிமுதல் செய்தது. ஆளில்லாமல் மிதந்து வந்த படகில் தீவிரவாதிகள் வந்தார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதலும் முறியடிக்க இந்திய படைகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக மறுத்தாலும், பதிலுக்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. குறிப்பாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு ஒட்டிய பகுதியில் 100 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, ஆர்எஸ்புரா உள்ளிட்ட இந்திய எல்லை ஒட்டிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளது. இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்ததால் இருதரப்புக்கும் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் எல்லை வரை ஆளில்லா குட்டி விமானத்தை அனுப்பி பாகிஸ்தான் இராணுவம் வேவு பார்த்து உள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை கூறியுள்ளது. காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்திலும் பாகிஸ்தான் அத்துமீறும் நிலையில் வடக்கு பஞ்சாப்பில் பாகிஸ்தான் படகு ஒன்றை எல்லை பாதுகாப்பு படை பறிமுதல் செய்தது. ஆளில்லாமல் மிதந்து வந்த படகில் தீவிரவாதிகள் வந்தார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதலும் முறியடிக்க இந்திய படைகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments