ஜிகாதிகளை சுதந்திரமாக நடமாட பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் சயீத் மசூத் அசார் கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் மற்றும் பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ளதாவது: பாகிஸ்தான் அரசு சிறிது தைரியமான நடவடிக்கை எடுத்து, காஷ்மீர் விவகாரம், நதிநீர் விவகாரம் ஆகியவற்றிற்கு தற்போது தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், முஜாகிதீன்களை சுதந்திரமாக நடமாட பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியாவின் அடிப்படை அமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்திய இராணுவத்தின் வீரம் யூரி மற்றும் பதன்கோட்டில் வெளிப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி சார்க் மாநாட்டை பாகிஸ்தானே முன்னதாக ரத்து செய்திருக்க வேண்டும். எல்லை கட்டுப்பாட்டில் செய்து கொள்ளப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பை தாக்குதல் மற்றும் பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ளதாவது: பாகிஸ்தான் அரசு சிறிது தைரியமான நடவடிக்கை எடுத்து, காஷ்மீர் விவகாரம், நதிநீர் விவகாரம் ஆகியவற்றிற்கு தற்போது தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், முஜாகிதீன்களை சுதந்திரமாக நடமாட பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியாவின் அடிப்படை அமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்திய இராணுவத்தின் வீரம் யூரி மற்றும் பதன்கோட்டில் வெளிப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி சார்க் மாநாட்டை பாகிஸ்தானே முன்னதாக ரத்து செய்திருக்க வேண்டும். எல்லை கட்டுப்பாட்டில் செய்து கொள்ளப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments