Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 27, 2016

லஞ்சம் வாங்கிய‌ வழக்கிலிருந்து எடியூரப்பா விடுதலை!

yediurappa got released from bribe case
ரூ.40 கோடி லஞ்ச  வழக்கில் இருந்து எடியூரப்பாவை விடுதலை செய்து பெங்களூரு சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

தற்போது பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் எடியூரப்பா, முதல்–மந்திரியாகவும், அதற்கு முன் துணை முதல்–மந்திரியாகவும் இருந்தபோது, பல்லாரியில் உள்ள ஜிந்தால் குழும நிறுவனங்களின் சவுத் வெஸ்ட் கனிம சுரங்க நிறுவனத்திற்கு கனிம சுரங்க தொழில் செய்ய உரிமம் வழங்கப்பட்டது.

இதற்கு கைமாறாக அந்த நிறுவனம் எடியூரப்பா மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்தும் பிரேரனா அறக்கட்டளைக்கு நன்கொடை வழியில் ரூ.20 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், மேலும், பெங்களூரு ராசேனஹள்ளி அருகே 1.12 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக சவுத் வெஸ்ட் கனிம நிறுவனத்துக்கு ரூ.20 கோடிக்கு எடியூரப்பா மகன்கள் விற்பனை செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆகமொத்தம் நன்கொடை மூலம் ரூ.20 கோடியும், நில விற்பனை மூலம் ரூ.20 கோடியும் என மொத்தம் ரூ.40 கோடி லஞ்சமாக எடியூரப்பா மகன்களுக்கு சவுத் வெஸ்ட் கனிம நிறுவனம் வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இந்த புகார்கள் குறித்து லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அரசுக்கு வழங்கிய அறிக்கையில் முதல்–மந்திரி எடியூரப்பா மீது  புகார் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து பா.ஜனதா மேலிடத்தின் கட்டளையை ஏற்று எடியூரப்பா, முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். லோக் அயுக்தா அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சமூக ஆர்வலர் ஹிரேமட், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன்படி சி.பி.ஐ. போலீசார் எடியூரப்பா மற்றும் அவருடைய மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன்குமார், முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யஷெட்டி உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை பெங்களூரு சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று காலை கூடியது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய எடியூரப்பா உள்பட அனைவரும் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கில் எடியூரப்பா உள்பட 13 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தர்மகவுடர் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு குறித்து வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் ஹிரேமட் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்’’ என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic