தேர்தல் படிவத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கைரேகை பதித்தது, வழக்கமான நடைமுறைதான் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டிய இடங்களில் அவரது இடது கை பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதுபற்றி கருத்து தெரிவித்த, ராஜேஷ் லக்கானி “ கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்து போடுவதற்கு பதிலாக பெருவிரல் ரேகை பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுதான் இது நடந்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டிய இடங்களில் அவரது இடது கை பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதுபற்றி கருத்து தெரிவித்த, ராஜேஷ் லக்கானி “ கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்து போடுவதற்கு பதிலாக பெருவிரல் ரேகை பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுதான் இது நடந்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறினார்.

No comments:
Write comments