பண மதிப்பிழப்பு அறிவிப்பு, மாநிலங்களின் மூலதனச் செலவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ICRA ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனையில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. சிறு வியாபாரம் முதல் பெருநிறுவனங்கள் வரை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பண மதிப்பிழப்பு அறிவிப்பால் மாநிலங்களின் மூலதனச் செலவில் பாதிப்பு ஏற்படும் என்று ICRA ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
‘ரூபாய் நோட்டுத் தடையால் மதிப்பு கூட்டப்பட்ட சேவை வரி விதிப்புகள் போன்ற மாநிலங்களின் முக்கிய மூலதனச் செலவுகளில் சரிவு ஏற்படும். சுற்றுலா உள்ளிட்ட துறைகளை நம்பியிருந்த சிறு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதிக விலையிலான பெட்ரோல், மாநிலத்தின் விற்பனை வரியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதுவே, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய வருவாயாக இருந்தது. அதேபோல, சில்லறை/மொத்த விற்பனை, போக்குவரத்து, ஆபரணம் சார்ந்த துறைகள் வரும் நாட்களில் மிகப்பெரும் சரிவைச் சந்திக்கவுள்ளன’ என்று ICRA ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Write comments