
தொழிலாளர்களுக்கு சம்பளம் இனி ரொக்கத்தில் கிடையாது; அவர்களுக்கு வங்கிகள் மூலமே வழங்குவதற்கான புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமென மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பிறகு பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், “சம்பள விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றன. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். மேலும் சட்டத்திருத்தம் கொண்டு வரும் முன் அரசாணை பிறப்பிக்கப்படும். இதன் பிறகு சம்பளம் ரொக்கமாக இல்லாமல் காசோலையாகவோ அல்லது வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் முறை விரைவில் கொண்டு வரப்படும்” என்றார். ஊதிய விஷயத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க இந்த சட்டம் அவசியம்” என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால், ஏழை தொழிலாளிகள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்குச் சம்பளத்தை ரொக்கமாக வழங்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
No comments:
Write comments