ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது விவகாரத்தால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து விட்ட நிலையில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அவ்வபோது அடிக்கடி அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,
பிரதமர் மோடி ஆடையை மாற்றுவதை போல ரிசர்வ் வங்கி அடிக்கடி விதிகளை மாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
செய்தி :: சாஹிப்....

No comments:
Write comments