Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 18, 2017

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா...!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போட்டிகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த திங்கள்கிழமையன்று திரண்ட ஏராளமான இளைஞர்கள் அங்கு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் பனி என்று கூட பாராமல், விடிய விடிய அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை, போலீசார் மறுநாள் காலையில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் நேற்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அவர்களது போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரீனா, மதுரை, அலங்காநல்லூர், கோவை, நெல்லை என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை தடை இல்லாமல் நடத்த வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic