இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ‘2.0’ திரைப்படம்,லைகா நிறுவனத்தால் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்.இது தவிர மற்றொரு வில்லனாக சுதன்ஷு பாண்டே நடித்து வருகிறார்.
அஜித் நடித்த பில்லா-2 படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முறையாக சுதன்ஷு பாண்டே அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்தே அவருக்கு 2.0 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,தனக்கும் நடிகர் அஜித்துக்கும் உள்ள நட்பு குறித்து பேசியுள்ளார்.
“பில்லா-2 படம் வெற்றிபெறாவிட்டாலும்,அந்த படம் மூலமாகத்தான் நான் பிரபலம் அடைந்தேன்.அதன் மூலமாகத்தான் 2.0 படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே இதற்காக நான் அஜித்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
அஜித் ஒரு சிறந்த மனிதர்.அவர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்பதை நான் தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர்தான் அறிந்து கொண்டேன்.நானும் அவரும் நல்ல நண்பர்கள்.இருவரும் ஒரே வயது என்பதால்,நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.அவர் மும்பை வந்த போது,ஒன்றாக உணவருந்தியுள்ளோம்.அவருக்கு கார் ரேஸ் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது.”என சுதன்ஷு பாண்டே அஜித்தை புகழ்ந்துள்ளார்.

No comments:
Write comments