ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது, காவல்துறையினர் தடியடி நடத்தியும் கலைந்து செல்ல முடியாது என மெரீனாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பாலிமர் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர், நான் பணம் தருகிறேன், இப்போது வெளியான பன்னீர்செல்வத்தின் அவசர சட்டம் கிடைத்தது சரி மற்றும் போராட்டத்தை கைவிட போவதாக சொல்லுங்கள் என இஸ்லாமிய பெண்ணிடம் பேசி பேட்டி எடுக்க முயன்றதாக தெரிகிறது.
ஆனால் அங்கிருந்தவர்கள் முடியாது என சொன்னவுடன் அங்கிருந்து செல்வது போன்று வீடியோ உள்ளது. இருப்பினும் செய்தியாளர் இப்படித்தான் சொல்லச் சொன்னாரா, உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான தகவல்கள் இல்லை.
No comments:
Write comments